/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அன்னாபிஷேகத்திற்கு அரிசி கொடுக்க அழைப்பு
/
அன்னாபிஷேகத்திற்கு அரிசி கொடுக்க அழைப்பு
ADDED : நவ 03, 2025 03:30 AM
நாமகிரிப்பேட்டை,: நாமகிரிப்பேட்டை அடுத்த கல்குறிச்சியில், வரலாற்று சிறப்பு மிக்க கற்பூரநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பழமை-யான இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு, பவுர்ணமி, அமா-வாசை நாட்களில் சிறப்பு வழிபாடு நடப்பதுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வரும், 5ல் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கல்குறிச்சி கற்பூரநாதேஸ்வரர் கோவில் பக்-தர்கள், அன்னாபிஷேகத்திற்கு தேவையான அரிசி, காய்கறி, பருப்பு, பழங்களை, நாளை மாலைக்குள் கொண்டு வந்து கொடுக்க கேட்டுக்கொண்டுள்ளனர். நாளை காலை முதல் மாலை வரை கோவிலில் அன்னாபிஷேகத்திற்கு தேவையான பொருட்-களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழாக்-குழுவினர் தெரிவித்தனர்.

