ADDED : அக் 12, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாசன வாய்க்காலில் குதுாகலம்
பள்ளிப்பாளையம், ஆக. 12-
பாசன வாய்க்காலில், அப்பகுதி மக்கள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், 10 கி.மீ., துாரத்திற்கு வாய்க்கால் செல்கிறது. நேற்று ஆயுதபூஜை என்பதால் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் குடும்பத்துடன், பள்ளிப்பாளையம் அருகே, சின்னாகவுண்டம்பாளையம் வழியாக செல்லும் வாய்க்காலில், ஏராளமான சிறுவர்கள், பொதுமக்கள் உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.