/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு: 11ல் சேலம் வருகை: சங்கங்களுக்கு அழைப்பு
/
லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு: 11ல் சேலம் வருகை: சங்கங்களுக்கு அழைப்பு
லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு: 11ல் சேலம் வருகை: சங்கங்களுக்கு அழைப்பு
லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு: 11ல் சேலம் வருகை: சங்கங்களுக்கு அழைப்பு
ADDED : பிப் 08, 2024 12:18 PM
நாமக்கல்: 'லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, வரும், 11ல், சேலம் மாவட்டம் வருகை தருகிறது. சங்கத்தினர் கோரிக்கை மனுக்களை நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ வழங்கலாம்' என, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, எம்.பி., கனிமொழி தலைமையில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்க உள்ளது. அதன்படி, வரும், 11 காலை, 10:00 மணிக்கு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், சேலம் வருகை தருகின்றனர்.
நாமக்கல் லோக்சபா தொகுதியின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட
தமிழக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு கோழிபண்ணையாளர்கள் சங்கம்.
தமிழக கோழிபொருட்கள் ஏற்றுமதி சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி ஓட்டுனர் சங்கம், லாரி பாடி பில்டர் சங்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கம், விசைத்தறி நெசவாளர்கள் சங்கம், விவசாய முன்னேற்ற சமூக சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், தங்களது நிறுவனம், தொழில் அமைப்புகள், சங்கங்கள் தொடர்பான மத்திய அரசின் சார்பில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கை மனுக்கள் மற்றும் ஆலோசனைகளை, தேர்தல் அறிக்கை குழுவினரிடம் நேரிலோ, கடிதம் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in என்ற இணையதள முகவரி மூலம் வழங்கலாம். கடிதங்களை, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு, அண்ணா அறிவாலயம், எண்.367/369, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை--600018 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

