sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வழித்தட பிரச்னையில் விவசாயியை தாக்கியவர் கைது

/

வழித்தட பிரச்னையில் விவசாயியை தாக்கியவர் கைது

வழித்தட பிரச்னையில் விவசாயியை தாக்கியவர் கைது

வழித்தட பிரச்னையில் விவசாயியை தாக்கியவர் கைது


ADDED : டிச 26, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அருகே, வழித்தடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்-தனர்.

நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொப்பப்பட்டி கரட்டு பாளை-யத்தார் காடு பகுதியை சேர்ந்தவர் சக்தி வேல், 55. இவரது தோட்டத்தில் தொப்பப்பட்டியை சேர்ந்த இளங்கோ, 45, கூலி வேலை செய்து வருகிறார். சக்திவேல் தோட்டத்திற்கு அருகே உள்ள காட்டை சேர்ந்தவர் கொடம்பகாடு கைலாசம் மகன் நித்தி-யானந்தம், 35. நிலம் தொடர்பாக சக்திவேல் மற்றும் நித்தியா-னந்தம் ஆகிய இருவர் இடையே வழித்தடப் பிரச்னையால், முன்விரோதம் உள்ளது.கடந்த, 15ம் தேதி மாலை சக்திவேல் தனது இருசக்கர வாக-னத்தில் வந்தபோது, அங்கு வந்த நித்தியானந்தம் அவரிடம் வழித்தடம் தொடர்பாக தகராறு செய்ததில் கைகலப்பு ஏற்பட்-டது. அப்போது ஆத்திரமடைந்த நித்தியானந்தம், காட்டில் களை வெட்டப் பயன்படுத்தும் களைவெட்டியால் சக்திவேலின் காலில் சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க வந்த தொழிலாளி இளங்-கோவின் கையையும் நித்தியானந்தம் கடித்துக் காயப்படுத்தினார்.

படுகாயமடைந்த சக்தி வேல், இளங்கோவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் சக்திவேல் மேல் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளங்கோ ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து

நித்தியானந்தத்தை கைது

செய்தனர்.






      Dinamalar
      Follow us