/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து
/
கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து
ADDED : டிச 26, 2025 05:31 AM
மல்லசமுத்திரம்: மோகனுாரை சேர்ந்தவர் இல்பான், 30; இவர் நேற்று, திருச்செங்-கோடு அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல், 50, என்பவரது விவசாய தோட்டத்தில் இருக்கும், மா மரங்களுக்கு மருந்து அடித்துவிட்டு மாலை 5:30 மணியளவில் டெம்போ வேனில், வேலையாட்கள், 8 பேருடன் மல்லசமுத்திரம் நோக்கி சென்றார்.
அப்போது, சின்னதம்பிபா-ளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது வேன் திடீரென கட்-டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் இல்பான் லேசான சிராய்ப்பு காயங்களுடன், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வேனில் பயணம் செய்த 8 பேர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்-களும் இன்றி உயிர் தப்பினர்.
இதுகுறித்து, மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

