ADDED : ஆக 18, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், ஆவாரங்காடு பகுதியில் அரசு மகளிர் பள்ளி அருகே வடிகால் செல்கிறது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, இந்த வடிகாலில், டிப்டாப் உடையணிந்த, 50 வயது-டைய ஒருவர் மது போதையில் விழுந்துவிட்டார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, சாக்கடையில் விழுந்தவரை போராடி மீட்டனர்.ஆவாரங்காடு பகுதியில் இரவு, பகலாக மது பாட்டில் விற்பனை நடந்து வருகிறது. மது குடிக்க, ஈரோடு, கருங்கல்பாளையம் உள்-ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். போதை தலைக்கேறிய நிலையில், இவ்வாறு வடிகாலில் விழுந்து-விடுகின்றனர். சில மாதங்களுக்கு முன், போதையில் இருதரப்பி-னருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. மது விற்பனையால் அப்-பகுதி மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.