/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
28ல் மா.திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
/
28ல் மா.திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ADDED : செப் 24, 2024 01:28 AM
ராசிபுரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், வரும், 28ல் நடக்கிறது என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், மாற்றுத்திற-னாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம், ராசி-புரம் அடுத்த வடுகம் அரசு
மேல்நிலைப்பள்ளியில் வரும், 28 காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
முகாமில், மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை குறித்து பரி-சோதனை செய்வதற்கு குழந்தைகள் நல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர் எலும்புமுறிவு சிகிச்சை மருத்துவர், மனநல சிகிச்சை மருத்துவர்,
கண் சிகிச்சை மருத்துவர் மற்றும் செவித்திறன் பரிசோதகர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு-வினர் கலந்துகொள்கின்றனர். சிறப்பு மருத்துவ முகாமில் மாற்-றுத்திறனாளிகளுக்கு புதியதாக அடையாள அட்டை வழங்குதல்,
ஏற்கனவே உள்ள அடையாள அட்டை புதுப்பித்தல், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு, ஆதார் அட்டை பதிவு, யு.டி.ஐ.டி., அட்டை வழங்குதல், புதிய வங்கி கணக்கு தொடங்குதல் ஆகிய பணிக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடன் மானியம், இலவச பயண அட்டை மற்றும் அனைத்து வகையான உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பம், இ-சேவை மையம் மூலம் இணையவழி பதிவேற்றம் செய்ய
நடவடிக்கை மேற்கொள்ளப்-படும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.