ADDED : அக் 20, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம், கலைமகள் தெருவில் வசிப்பவர் மளிகை வியாபாரி முகமது அமீன், 27. இவர் கடந்த, 8 இரவு 10:00 மணி-யளவில் வீட்டின் ஜன்னல் ஓரம், இரண்டு மொபைல் போன்-களை வைத்து விட்டு துாங்க சென்றார்.
மறுநாள் காலை பார்த்த போது, போன்களை காணவில்லை. முதல் நாள் வீட்டிற்கு சுண்-ணாம்பு அடிக்க வந்த, அதே வீதியை சேர்ந்த மணி என்ற நபர் மீது சந்தேகம் எழுந்தது. நேற்று காலை, 11:00 மணியளவில் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனது மளிகை கடை எதிரில், மணி நின்று கொண்டிருக்க, அவரை பிடித்து சோதனை செய்த முகமது அமீன், அவரிடம் இரண்டு மொபைல் போன்களும், டிராயரில் இரண்டு ஆண்டராய்டு மொபைல் போன்-களும் என, நான்கு போன்கள் இருந்தது தெரியவந்தது.குமாரபாளையம் போலீசார் விசாரித்து, மணியை கைது செய்து, நான்கு போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.