/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எப்.சி., கட்டண உயர்வை மாற்றியமைக்க பார்லியில் எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
/
எப்.சி., கட்டண உயர்வை மாற்றியமைக்க பார்லியில் எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
எப்.சி., கட்டண உயர்வை மாற்றியமைக்க பார்லியில் எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
எப்.சி., கட்டண உயர்வை மாற்றியமைக்க பார்லியில் எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
ADDED : டிச 11, 2025 06:50 AM
நாமக்கல்: டில்லியில் நடந்து வரும் பார்லி., கூட்டத்தொ-டரில், ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில், நாமக்கல் ராஜ்யசபா எம்.பி., ராஜேஸ்குமார் பேசி-யதாவது:
மத்திய அரசு, பழைய கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை, ஸ்கிராப் செய்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க வேண்டும்; ஆண்டுதோறும், எப்.சி., சான்று பெறுவதற்கான கட்டணம், 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என, உத்தரவிட்-டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலான லாரி உள்-ளிட்ட வணிக வாகனங்களை, கட்டாயமாக ஸ்கிராப்பிங் செய்து விற்பனை செய்வது, எண்-ணற்ற லாரி உரிமையாளர்களின் வாழ்வாதா-ரத்தை கடுமையாக பாதித்து வருகிறது.
இந்திய சரக்கு போக்குவரத்தின் முதுகெலும்பான லாரிகளில், மாசுபாட்டிற்கான முக்கிய காரணம் பொதுவாக பழைய இன்ஜின் தான். எனவே, பழைய லாரிகள் முழுமையாக ஸ்கிராப் செய்-யாமல், பழைய மாசுபடுத்தும் இன்ஜினை மாற்றி, புதிய பாரத் ஸ்டேஜ்-6 நிலைக்கு இணக்கமான இன்ஜினை லாரியில் பொருத்தினால், சுற்றுச்-சூழல் மாசு தடுக்கப்படும். இந்த கொள்கையை மறுபரிசீலனை செய்து, 20 ஆண்டுகளுக்கும் மேலான லாரிகளில் பழைய இன்ஜினை மட்டும் மாற்றி, புதிய பி.எஸ்.,6 சான்-றளிக்கப்பட்ட இன்ஜினை பொருத்தி பழைய லாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும்.
முழு-மையாக லாரிகளை ஸ்கிராப் செய்ய வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

