/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் தெற்கு அரசு பள்ளி சார்பில் ஏரிக்கரையில் 2,000 பனை விதை நடவு
/
நாமக்கல் தெற்கு அரசு பள்ளி சார்பில் ஏரிக்கரையில் 2,000 பனை விதை நடவு
நாமக்கல் தெற்கு அரசு பள்ளி சார்பில் ஏரிக்கரையில் 2,000 பனை விதை நடவு
நாமக்கல் தெற்கு அரசு பள்ளி சார்பில் ஏரிக்கரையில் 2,000 பனை விதை நடவு
ADDED : டிச 09, 2025 05:11 AM
நாமக்கல்: நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மரூர்பட்டி சாலையூர் ஏரிக்கரையில், 2,000 பனை விதைகளை நடவு செய்தனர்.
தமிழகத்தில், நீர்மட்டத்தை உயர்த்தவும், மண் வளத்தை பாதுகாத்து, மண் அரிப்பை தடுக்கவும், மாநில மரமான பனை மரத்தின் எண்ணிக்கையை அதிகரித்து, வளமான தமிழகத்தை உருவாக்க, மாநிலம் முழுவதும், பனை விதை நடவு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள், பசுமை படை உறுப்பினர்கள் சார்பில், நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மரூர்பட்டி சாலையூர் சின்ன ஏரிக்கரை பகுதிகளில், 2,000 பனை விதை நடவு செய்யப்பட்டது.இப்பணியில், பள்ளி பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சுமதி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாவை அரசி, மாவட்ட தொடர்பு அலுவலர் ராமு, உடற்கல்வி ஆசிரியர் சரவணன், முதுகலை ஆசிரியர்கள் ஜெகதீசன், ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த, நவ.,ல், தொட்டிப்பட்டி ஏரிக்கரை பகுதிகளில், 2,000 பனை விதைகளையும், அணியாபுரம் ஏரிக்கரையில், 1,500 பனை விதைகளையும், இரண்டு கட்டங்களாக நடவு செய்துள்ளனர்.
தற்போது, மூன்றாம் கட்டமாக, 2,000 பண விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை, 5,500 பனை விதைகள், பல்வேறு ஏரிக்கரை பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

