/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
21ல் எட்டுக்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
21ல் எட்டுக்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 15, 2024 12:18 PM
ப.வேலுார்: நாமக்கல், கீரம்பூரில் பிரசித்தி பெற்ற எட்டுக்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. கொங்கு வேளாளர் கவுண்டர்களில் செம்பூத்தான் குலம், பண்ணை குல குடிப்பாட்டு மக்களின் குலதெய்வமாக எட்டுக்கை அம்மன் வணங்கப்படுகிறது. கடந்த, 2009ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 12 ஆண்டுக்கு பின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரும், 21ல் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையொட்டி, நாளை இரவு கிராம சாந்தியுடன் விழா தொடங்குகிறது. 17ல் அனுமதி பெறுதல், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை; 18 காலை, 9:00 மணிக்கு ப.வேலுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வருதல்.
அன்று மாலை, 6:00 மணிக்கு முதற்கால யாக பூஜை; 19- காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை, மூன்றாம் கால யாக பூஜை; 20ல் நான்காம் கல யாக பூஜை, மாலையில் கோபுர கலசம் வைத்தல், கண் திறப்பு நிகழ்ச்சி; இரவு, திருமுறை பாராயணம், வேத பாராயணம், மூல மந்திரங்களுடன் ஐந்தாம் கால யாக பூஜையும், எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.
வரும், 21 காலை ஆறாம் கால யாக பூஜையும், தொடர்ந்து, மகா கும்பாபிஷேக விழா, காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோவில் திருப்பணி குழுவினர், அறங்காவலர் குழுவினர், செம்பூத்தான் குல, பண்ணை குல பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

