/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க., ஆர்ப்பாட்டம்
/
இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 13, 2025 05:54 AM
நாமக்கல்: பா.ம.க., சார்பில், வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் உமாசங்கர், மத்திய மாவட்ட செயலாளர் ராமராஜ், வன்னியர் சங்க மாவட்ட செய-லாளர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஜாதிவாரி கணக்கெ-டுப்பை நடத்த வேண்டும்; 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வன்னி-யர்களுக்கு வழங்க வேண்டும்; அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

