/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
25 பவுன் நகை திருட்டு சிறை கைதிக்கு குண்டாஸ்
/
25 பவுன் நகை திருட்டு சிறை கைதிக்கு குண்டாஸ்
ADDED : டிச 31, 2025 05:56 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் பூலக்காடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 41; லேத் பட்டறை தொழிலாளி. இவர், குடும்பத்துடன் சேலம் சென்றுவிட்டு, நவ., 28 காலை, 8:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.
அப்-போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டி-ருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, 25 பவுன் நகை திருடப்பட்டிருந்-தது தெரியவந்தது. குமாரபாளையம் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.இந்நிலையில், போலீசார், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு-வரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், நாகராஜ் வீட்டில் நகை திருடியவர் என்பது தெரி-யவந்தது. இவர், சீர்காழியை சேர்ந்த விஜய-பாஸ்கர், 30, என்பதும், பல்வேறு மாவட்டங்-களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரி-யவந்தது. சிறையில் உள்ள விஜயபாஸ்கரிடம், குண்டாஸ் வழக்கில் கைது செய்ததற்கான உத்த-ரவை வழங்கினர்.

