/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தார்ச்சாலையாக மாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
தார்ச்சாலையாக மாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 28, 2024 02:13 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலை, சேலுார் நாடு பஞ்.,ல் இருந்து எருமப்பட்டிக்கு வரும் குதிரைப்பாதை ஒத்தையடி சாலையை, தார்ச்சாலையாக மாற்ற வலியுறுத்தி, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், கொல்லி-மலை தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்-தது.
மலைவாழ் மக்கள் சங்க தலைவர் தங்கராசு தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டெல்லிபாபு, மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்துகண்ணன் உள்-ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
முன்னதாக, குதிரைப்பாதையை தார்ச்சாலையாக மாற்ற வலியு-றுத்தி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை தலைச்-சுமையாக துாக்கி வந்து தாசில்தாரிடம் வழங்கினர்.