நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், டிச. 21-
அம்பேத்கரை அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, குமாரபாளையத்தில், தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதே போல் சி.பி.ஐ., சார்பில் நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்., கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.