sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சீரான குடிநீர் வழங்க கோரிக்கை

/

சீரான குடிநீர் வழங்க கோரிக்கை

சீரான குடிநீர் வழங்க கோரிக்கை

சீரான குடிநீர் வழங்க கோரிக்கை


ADDED : டிச 08, 2024 03:51 AM

Google News

ADDED : டிச 08, 2024 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்.,ல் இச்சிக்குட்டை கிராமம் உள்ளது. இங்குள்ள, 7, 8வது வார்டுகளில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் வசதிக்காக, கார-வள்ளியில் இருந்து காளப்பநாய்க்கன்பட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயில், குடிநீர் பிடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு குழாயில் அப்பகுதியை சேர்ந்த மக்கள், 200க்கும் மேற்பட்‍டோர், நீண்ட நேரம் காலி குடங்களுடன் குடிநீர் பிடிக்க காத்திருக்கின்றனர்.

ஆனால், பெரும்பாலான நாட்களில் குடிநீர் பிடிப்பதற்கு முன்பே நின்று விடுகிறது. இதனால், குடிப்பதற்கு கூட தண்ணீ-ரின்றி அவதியை சந்திக்கின்றனர். எனவே, டவுன் பஞ்., நிர்-வாகம், இப்பகுதி மக்களுக்கு கூடுதலாக, 2 குடிநீர் குழாய் அமைத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us