/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நெல் கொள்முதல் நிலையத்தை முன் கூட்டியே திறக்க கோரிக்கை
/
நெல் கொள்முதல் நிலையத்தை முன் கூட்டியே திறக்க கோரிக்கை
நெல் கொள்முதல் நிலையத்தை முன் கூட்டியே திறக்க கோரிக்கை
நெல் கொள்முதல் நிலையத்தை முன் கூட்டியே திறக்க கோரிக்கை
ADDED : டிச 11, 2025 06:51 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை முன் கூட்டியே திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பாளையத்தில், எலந்தகுட்டை, மோளக-வுண்டம்பாளையம், எளையாம்பாளையம், சமய-சங்கிலி, சின்னார்பாளையம், ஆலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் செல்லும் மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், பாசனத்-திற்கு தண்ணீர் திறக்கும்போது, இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி
செய்வர். இந்-தாண்டு, முன்கூட்டியே ஜூலை மாதம், மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்-டது. இதையடுத்து விவசாயிகள் நெல் சாகுப-டியில் ஈடுபட்டனர். இந்த மாதம் இறுதியில் சாகு-படி செய்த நெல் அறுவடைக்கு வந்துவிடும்.
இந்நிலையில், வழக்கமாக பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் எலந்தகுட்டை, களியனுார் பகுதியில் ஜன., முதல் வாரத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்-பது வழக்கம். முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், நெல் சாகுபடி பணியும் முன் கூட்டியே விவசாயிகள் துவக்கி-விட்டனர். இதனால், விரைவில் அறுவடைக்கு வந்து விடும்.
எனவே, விவசாயிகள் பயன்பெறும் வகையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முன்கூட்டியே திறக்க வேண்டும் என, விவசா-யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

