/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓய்வு சத்துணவு பணியாளர் வீட்டில் 2 பவுன் திருட்டு
/
ஓய்வு சத்துணவு பணியாளர் வீட்டில் 2 பவுன் திருட்டு
ADDED : நவ 23, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்,மோகனுார், முதலியார் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி, 62; ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர். கடந்த, 18 மதியம், 1:00 மணிக்கு, வீட்டை பூட்டிவிட்டு, ராசிபாளையத்தில் உள்ள பேத்தி வீட்டிற்கு சென்றுவிட்டார். மாலை, 5:00 மணிக்கு, வீடு திரும்பி உள்ளார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 8 கிராம் தங்க காசு, 6 கிராம் தோடு, 2 கிராமில், 2 மோதிரம், என, 18 கிராம் எடையுள்ள நகைகள், 2,000 ரூபாய் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மோகனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

