sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நெல் சாகுபடியில் அதிக மகசூல் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு

/

நெல் சாகுபடியில் அதிக மகசூல் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு

நெல் சாகுபடியில் அதிக மகசூல் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு

நெல் சாகுபடியில் அதிக மகசூல் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு


ADDED : ஆக 22, 2025 01:31 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்,

நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

நடப்பு 2025--26ம் ஆண்டிற்கான உயரிய தொழில்நுட்பத்தை கடைபிடித்து, திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில், மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் சிறப்பு பரிசும், 7,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிக்கு, குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ வைத்து, திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும். மேலும், பயிர் விளைச்சல் போட்டியில் குறைந்தபட்சம், 50 சென்ட் பரப்பு நெற்பயிர், நடுவர்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்படும்.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள், தங்களது வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பதிவு கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண் இயக்குனர் தலைமையிலான, மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. மேலும், விபரத்தினை பெற தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us