நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம்,
கதிராநல்லுார் நத்தம்மேடு எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் பெரியசாமி, 57.
இவர் வள்ளிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், காவலாளியாக பணியாற்றி
வரு-கிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்ககு, தனக்கு சொந்-தமான,
டி.வி.எஸ்., மொபட்டில் பெரியசாமி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது
சேலத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் மொபட் மீது மோதி
விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமியை,
அக்கம்பக்-கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி
மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்-டர்கள், அவர்
இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

