sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உழவர்சந்தையில் 50 டன் காய்கறி விற்பனை

/

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உழவர்சந்தையில் 50 டன் காய்கறி விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உழவர்சந்தையில் 50 டன் காய்கறி விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உழவர்சந்தையில் 50 டன் காய்கறி விற்பனை


ADDED : ஜன 13, 2025 02:45 AM

Google News

ADDED : ஜன 13, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்-தையில், நேற்று ஒரே நாளில், 50 டன் காய்கறிகள், 22 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை செயல்படும் உழவர் சந்தையில், நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்-களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து அவற்றை வாங்கிச் செல்-கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்-றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்-தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில், காய்கறி விற்பனை விறுவி-றுப்பாக நடந்தது. மொத்தம், 208 விவசாயிகள் காய்கறி, பழங்-களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 40,120 கிலோ காய்-கறிகள், 10,025 கிலோ பழங்கள், 15 கிலோ பூக்கள் என மொத்தம், 50,160 கிலோ எடையுள்ள விளை பொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்-டன. அவற்றை, 10,032 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 21 லட்சத்து, 97,855 ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us