/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் சிறப்பு தரிசனம்
/
ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் சிறப்பு தரிசனம்
ADDED : அக் 24, 2025 01:20 AM
நாமக்கல், நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள, ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் ராம நவமி, பிரதிஷ்டை தினம், குரு பூர்ணிமா, குரு ராகவேந்திரா ஆராதனை, விநாயகர் சதுார்த்தி, விஜய தசமி மற்றும் தத்தாத்ரேயர் ஜெயந்தி ஆகிய முக்கிய நாட்களிலும், ஒவ்வொரு வாரம் வியாழக்கிமையும் சிறப்பு ஆரத்தி நடக்கும்.
அந்த வகையில் நேற்று, ஐப்பசி வியாழக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை காகட ஆரத்தி, அபி ேஷகம், பஜனை, கூட்டு பிரார்த்தனை, வேதங்கள் முழங்க பாபாவிற்கு தீபாராதனை காண்பித்து மதியம் ஆரத்தி நடந்தது. மாலை துாப் ஆரத்தி, இரவு ஆரத்தி நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராமான பக்தர்கள், ஷீரடி சாய் தத்தாவை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

