sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்' ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

/

குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்' ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்' ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்' ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு


ADDED : ஆக 02, 2025 02:09 AM

Google News

ADDED : ஆக 02, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், ப.வேலுார், பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா அதிகளவில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ப.வேலுார், வெங்கரை, பாண்டமங்கலம் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில் சில தினங்களுக்கு முன் போலீசார் டீக்கடை, மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, இரண்டு கடைகளில் குட்கா பறிமுதல் செய்தனர். ப.வேலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் ப.வேலுார் போலீசார் குட்கா விற்ற, இரண்டு கடைகளுக்கு நேற்று சீல் வைத்து, தலா, 50,000 ரூபாய் என, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள், குட்கா விற்பனையில் ஈடுபடும் கடைகளை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.

குட்கா தடை பொருட்கள் விற்பனை செய்வோர் குறிப்பாக பள்ளி, கல்லுாரி அருகே விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us