sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கடைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு

/

கடைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு

கடைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு

கடைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு


ADDED : செப் 30, 2025 01:41 AM

Google News

ADDED : செப் 30, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம் ராசிபுரம், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், டிபார்ட்மென்ட் ஸ்டோர் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், 8க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தினசரி, 100க்கும் மேற்பட்டோர் கடைக்கு வந்து செல்கின்றனர். நேற்று காலை கடைக்குள், 5 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு இருப்பதை பார்த்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் வருவதற்குள், பாம்பு கடைக்குள் சென்று மறைந்தது. தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாக போராடி பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அருகில் இருந்த நபர் ஒருவர் பாம்பை சுலபமாக கையில் பிடித்து தீயணைப்பு துறையினரிடம் கொடுத்தார். பாம்பை சாக்குப்பையில் போட்டு, வனத்துறையினர் காப்பு காட்டில் விடுவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us