sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் குறித்து ஆய்வு

/

தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் குறித்து ஆய்வு

தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் குறித்து ஆய்வு

தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் குறித்து ஆய்வு


ADDED : ஆக 16, 2024 05:33 AM

Google News

ADDED : ஆக 16, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் பகுதியில், சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை, மாதேஸ்வரன் எம்.பி., பார்வையிட்டு மேம்பாலங்கள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் வழியாக செல்லும், சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட சில இடங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. மேலும் பல இடங்களில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்லவும், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லவும், பொதுமக்கள் சாலையை கடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து, இருபக்கமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இதையொட்டி, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கருங்கல்பாளையம், பொம்மைகுட்டைமேடு, பெருமாள்கோவில்மேடு, புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் பகுதி, உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பது குறித்து, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us