sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'சிப்காட்' நில எடுப்பு டி.ஆர்.ஓ.,விடம் எதிர்ப்பு இயக்கம் ஆவணம் சமர்ப்பிப்பு

/

'சிப்காட்' நில எடுப்பு டி.ஆர்.ஓ.,விடம் எதிர்ப்பு இயக்கம் ஆவணம் சமர்ப்பிப்பு

'சிப்காட்' நில எடுப்பு டி.ஆர்.ஓ.,விடம் எதிர்ப்பு இயக்கம் ஆவணம் சமர்ப்பிப்பு

'சிப்காட்' நில எடுப்பு டி.ஆர்.ஓ.,விடம் எதிர்ப்பு இயக்கம் ஆவணம் சமர்ப்பிப்பு


ADDED : டிச 27, 2025 05:13 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில் நில எடுப்பு டி.ஆர்.ஓ.,விடம், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர், 41 ஆவணங்கள் சமர்ப்பித்தனர்.

மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி பகுதியில் உள்ள, 806 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க தமிழகரசு அரசாணை வெளியிட்டது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், நீர்த்தேக்க குட்டைகள், சிறு ஓடைகள், தடுப்பணைகள் உள்ளிட்டவைகளை மறைத்து மேய்ச்சல் புறம்போக்கு என, வருவாய்த்துறையினர் அரசுக்கு ஆவணங்களை அனுப்பி அப்பகுதியில் சிப்காட் அமைக்க முயற்சிப்பதாக கூறி, தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் நுாற்றுக்கு மேற்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சில நாட்களுக்கு முன் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை அளவீடு செய்வதற்காக வருவாய் துறையினர் சென்றபோது அவர்களை அப்பகுதி விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, நேற்று முன்தினம் நில எடுப்பு டி.ஆர்.ஓ., விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சிப்காட் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை அரசாணை, நீதிமன்ற உத்தரவுகளை மீறி தங்களது விவசாய நிலங்களை அரசு அதிகாரிகள் தவறான ஆவணங்கள் மூலம் கையகப்படுத்த முனைப்பு காட்டுவதாகவும் இதற்கு தாங்கள் ஒருபோதும் ஒத்துழைக்கும் மாட்டோம் எனக்கூறி சென்றனர்.

இதையடுத்து, 2ம் நாளாக, நேற்று சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் நில எடுப்பு, டி.ஆர்.ஓ., கண்ணனை சந்தித்து சிப்காட் அமைப்பதற்கான வழிமுறை அரசாணை, நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட, 41 ஆவணங்களை வருவாய் அலுவலர்களிடம் வழங்கினர். மேலும் தங்களது விவசாய நிலங்களை ஒருபோதும் சிப்காட் அமைக்க வழங்க மாட்டோம் எனவும் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us