/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் ரப்பர் விபத்து தடுப்பான் அமைக்க சர்வே
/
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் ரப்பர் விபத்து தடுப்பான் அமைக்க சர்வே
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் ரப்பர் விபத்து தடுப்பான் அமைக்க சர்வே
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் ரப்பர் விபத்து தடுப்பான் அமைக்க சர்வே
ADDED : அக் 20, 2024 01:21 AM
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில்
ரப்பர் விபத்து தடுப்பான் அமைக்க சர்வே
சேந்தமங்கலம், அக். 20-
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவுகளில் உயிரிழப்புகளை தடுக்க, ரப்பர் உருளை விபத்து தடுப்பான் அமைப்பதற்காக சர்வே பணி தொடங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மூலிகைகள் நிறைந்த, சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 1,200 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்கு, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலை அடிவாரமான காரவள்ளியில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலையில், விபத்து ஏற்படாமல் இருக்க தடுப்பு சுவர்கள், இரும்பு கம்பிகள் தடுப்புகளாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், ஆபத்தான, 13வது கொண்டை ஊசி வளைவு முதல் 30வது கொண்டை ஊசி வளைவு வரை, 1,500 மீட்டர் தொலைவிற்கு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரப்பர் மூலம் உருவாக்கப்பட்ட உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்க சர்வே பணி நேற்று தொடங்கியது.
இது குறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறுகையில்,'கொண்டை ஊசி வளைவுகளில் இரும்பு மற்றும் தடுப்பு சுவர்களில், வாகனங்கள் மோதினால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, உயிரிழப்பை தடுக்கும் வகையில், வெளி நாட்டு தொழில் நுட்பத்தில் உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்க, 10 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான சர்வே பணி துவங்கியுள்ளது. இப்பணி ஒரு மாதத்தில் முடிக்கப்படும்,' என்றார்.