/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய யோகா போட்டி தமிழக அணி சாம்பியன்
/
தேசிய யோகா போட்டி தமிழக அணி சாம்பியன்
ADDED : நவ 23, 2024 01:42 AM
தேசிய யோகா போட்டி
தமிழக அணி சாம்பியன்
குமாரபாளையம், நவ. 23-
தேசிய அளவிலான யோகா போட்டி, ஐதராபாதில் நடந்தது. இதில் குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, பஞ்சாப், கோவா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
தமிழக அணி சார்பில், 81 பேர் பங்கேற்றனர். இதில், குமாரபாளையம் அரவிந்த் யோகா பயிற்சி மையத்திலிருந்து, 22 பேர் பங்கேற்று பதக்கம் வென்றனர். யோகா மாணவி பரணிஸ்ரீ சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அணிக்கு பெருமை சேர்த்தார். தேசிய அளவிலான போட்டியில், தமிழக அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
தமிழக யோகா சங்க செயலாளர் அரவிந்த், அரவிந்த் யோகா பயிற்சி மைய நிர்வாகி மதுமிதா, தமிழக பயிற்சியாளர்கள் பரணிதரன், சந்தியா, வினோத் உள்பட பலர் பங்கேற்றனர்.
சாதனை படைத்த யோகா சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா, அரவிந்த் யோகா பயிற்சி மையத்தில் நடந்தது. இதில் சாதனையாளர்களை, பெற்றோர் உள்பட மைய நிர்வாகிகள் பாராட்டினர்.