/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் விழாக்கோலம் 'தீபாவளி பலகாரம் தயாரிக்க உரிம சான்று கட்டாயம்'
/
காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் விழாக்கோலம் 'தீபாவளி பலகாரம் தயாரிக்க உரிம சான்று கட்டாயம்'
காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் விழாக்கோலம் 'தீபாவளி பலகாரம் தயாரிக்க உரிம சான்று கட்டாயம்'
காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் விழாக்கோலம் 'தீபாவளி பலகாரம் தயாரிக்க உரிம சான்று கட்டாயம்'
ADDED : அக் 03, 2025 01:40 AM
பள்ளிப்பாளையம் 'பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் தீபாவளிக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிக்க, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் கட்டாயம் பெற வேண்டும்' என, வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பேக்கரிகள், திருமண மண்டபங்கள் இனிப்பு, கார வகைகள் தயாரித்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்வர்.
இது பற்றி பள்ளிப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் கூறியதாவது:
சுத்தமான சுகாதாரமான இடங்களில் மட்டுமே இனிப்பு, கார வகைகள் தயாரிக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது. தரமான மூலப்பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
இனிப்பு கார வகைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோர், கட்டாயம், உணவு பாதுகாப்புத்துறையின் உரிம சான்று பெற வேண்டும். செயற்கை நிறமுட்டி பயன்படுத்த கூடாது, தயாரிக்கும் இனிப்பு, கார வகைள் நல்ல தரமானதாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த கூடாது.
இவ்வாறு தெரிவித்தார்.