/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 2 கோவில்களில் திருப்பணி வீடியோ கான்பரன்சில் முதல்வர் அடிக்கல்
/
மாவட்டத்தில் 2 கோவில்களில் திருப்பணி வீடியோ கான்பரன்சில் முதல்வர் அடிக்கல்
மாவட்டத்தில் 2 கோவில்களில் திருப்பணி வீடியோ கான்பரன்சில் முதல்வர் அடிக்கல்
மாவட்டத்தில் 2 கோவில்களில் திருப்பணி வீடியோ கான்பரன்சில் முதல்வர் அடிக்கல்
ADDED : நவ 14, 2024 07:22 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் கட்டு-மான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை, வீடியோ கான்-பரன்ஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோவில் மற்றும் சேந்தமங்கலம் யூனியன், பேளுக்குறிச்சி பழனி-யாண்டவர் கோவில்களில், 3.45 கோடி ரூபாய் மதிப்பில் திருப்ப-ணிகளை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து, பேளுக்குறிச்சி பழனியாண்டவர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் உமா கலந்துகொண்டார்.தொடர்ந்து அவர் கூறியதாவது:கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவிலில், 2.10 கோடி ரூபாய் மதிப்பில், 3 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி மற்றும் கூவைமலை, பழனியாண்டவர் கோவிலில், 1.35 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுப்பிரகார கல் மண்டபம்
கட்டும் பணி என, மொத்தம், 3.45 கோடி ரூபாய் மதிப்பில், 2 புதிய திட்டப்பணிக-ளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். விரைவில் இப்ப-ணிகள் கட்டி முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அட்மா குழுத்தலைவர் அசோக்குமார், ஹிந்து சமய அறநிலையத்-துறை துணை கமிஷனர் நந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்-டனர்.

