sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருச்செங்கோடு நகராட்சியின் மின் கட்டண பாக்கி ரூ.25 கோடி

/

திருச்செங்கோடு நகராட்சியின் மின் கட்டண பாக்கி ரூ.25 கோடி

திருச்செங்கோடு நகராட்சியின் மின் கட்டண பாக்கி ரூ.25 கோடி

திருச்செங்கோடு நகராட்சியின் மின் கட்டண பாக்கி ரூ.25 கோடி


ADDED : செப் 30, 2025 01:40 AM

Google News

ADDED : செப் 30, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு, திருச்செங்கோடு நகராட்சி சாதாரண கூட்டம், சேர்மன் நளினி சுரேஷ் பாபு தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் வாசுதேவன், இன்ஜினியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த, 41 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கவுன்சிலர் தமிழரசன், தி.மு.க.,: என் வார்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சீரமைத்து தர வேண்டும். நரி பள்ளம் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்து, கொசு புகை மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணற்றுக்கு மின் மோட்டார் அமைத்து கொடுக்க வேண்டும்.

இன்ஜினியர் சரவணன்: நகராட்சியில் மின்சார வாரியத்திற்கு மின் கட்டண பாக்கி, 25 கோடி ரூபாய் உள்ளது. எனவே, புதிய மின்மோட்டார் உடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க முடியாது. அடி பம்பு சரி செய்து தரப்படும். போர்வெல்லுக்கு புதிதாக மின் மோட்டார் அமைக்க முடியாது என தெரிவித்தார்.

கமிஷனர் வாசுதேவன்: நகராட்சியின் வரவு செலவு இந்த மாதம், 77 லட்ச ரூபாய் பற்றாக்குறையில் உள்ளது. எனவே, நகராட்சியில் செலவினங்களை குறைத்து பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us