/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சி
/
திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சி
ADDED : நவ 03, 2025 03:33 AM
ராசிபுரம்: 'திருக்குறள் சொல்லும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற திட்டத்தின் கீழ், 11வது வாரமாக குறள் பயிற்றுவிக்கும் பயிற்சி வகுப்பு, ராசி-புரம் தமிழ் கழகம் சார்பில், பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்-ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் பாரதி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட பள்ளி துணை ஆய்வாளரும், ராசி-புரம் தமிழ் கழகத்தின் செயலாளருமான பெரியசாமி துவக்கி வைத்து பேசுகையில்,
''திருக்குறள் ஒப்பு உயர்வற்ற உலகியல் நுால் சாதி, மத, நாடு மொழி வேற்றுமை கடந்த உலக பொது நுால்; உலகியல் நெறியை அகம் புறம் என்று வகுத்து, அவற்-றுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழுக்கும், தமிழனுக்-குத்தான் உண்டு. தமிழரின் தலை நிமிர்ந்த வாழ்விற்கு உயிர்நா-டியாய் விளங்குவது திருக்குறள்,'' என்றார்.பயிற்சியில், 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்-டனர். திருக்குறள் வகுப்புக்கு வந்த மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர். ராசிபுரம் தமிழ் கழகத்தின் பொருளாளர் ரீகன் நன்றி கூறினார்.

