/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருவள்ளுவர், காந்தி சிலை திறப்பு விழா
/
திருவள்ளுவர், காந்தி சிலை திறப்பு விழா
ADDED : ஜன 16, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: தமிழக அரசு பொது நுாலகத்துறை மாவட்ட நுாலக ஆணைக்குழு மற்றும் மல்லசமுத்திரம் கிளை நுாலகம் சார்பில், நேற்று மல்லசமுத்திரத்தில் கிளை நுாலகம் புதுப்பித்தல் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர், காந்தி சிலை திறப்பு விழா நடந்தது.
டவுன் பஞ்., தலைவர் திருமலை தலைமை வகித்தார். நுாலக வாசகர் வட்ட தலைவர் வடிவேல் வரவேற்றார். நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிலைகளை திறந்து வைத்தனர்.