sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி

/

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி


ADDED : ஆக 30, 2024 01:26 AM

Google News

ADDED : ஆக 30, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ் வளர்ச்சி துறை சார்பில்

திருக்குறள் முற்றோதல் போட்டி

நாமக்கல், ஆக. 30-

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை மூலம், நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு மாணவி மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:

திருக்குறளில் உள்ள கருத்துக்களை, பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில், தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவ, மாணவியருக்கு தலா, 15 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே பரிசு பெற்றவர்கள், மீண்டும் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. பங்கேற்க விரும்பும் மாணவர்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது, தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் https://tamilvalarchithurai.tn.gov.in// இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செப்.,30-க்குள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம். மேலும் விபரம் பெற, 04286-292164 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us