ADDED : அக் 09, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகையிலை விற்றவர் கைது
சேந்தமங்கலம், அக். 9-
சேந்தமங்கலம் டவுன் பஞ்., நாமக்கல் சாலையில் மளிகை கடை நடத்தி வருபவர் சிக்கந்தர் பாஷா, 60; இவர், மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மளிகை கடையை சோதனை செய்த போலீசார், அவர் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த, 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், சிக்கந்தர் பாஷாவை கைது செய்தனர்.