/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாளை தி.மு.க., கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம்
/
நாளை தி.மு.க., கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம்
ADDED : அக் 17, 2024 01:33 AM
நாளை தி.மு.க., கிழக்கு மாவட்ட
செயற்குழுக் கூட்டம்
நாமக்கல், அக். 17-
தமிழக முதல்வர் வருகையையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுக் கூட்டம் நாளை நடக்கிறது.
இதுகுறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுக் கூட்டம் நாளை காலை 10:00 மணிக்கு நாமக்கல்-- மோகனுார் சாலை, முல்லை நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். ஆதிதிராவிடர் நலத்துறைற அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,கள் பொன்னுசாமி, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றறனர். கூட்டத்தில், முன்னாள் எம்.பி.,கள், எம்.எல்.ஏ.,கள், தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இதில், நாமக்கல்- பரமத்தி சாலை, செலம்பக்கவுண்டர் பூங்கா பகுதியில் திறக்கப்பட உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா, பொம்மைக்குட்டைமேட்டில் 20,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பது தொடர்பாகவும், தொகுதி பார்வையாளர்கள் அறிமுகம் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.