sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொண்டை ஊசி வளைவில் மரம் சாய்ந்து பாதிப்பு

/

கொண்டை ஊசி வளைவில் மரம் சாய்ந்து பாதிப்பு

கொண்டை ஊசி வளைவில் மரம் சாய்ந்து பாதிப்பு

கொண்டை ஊசி வளைவில் மரம் சாய்ந்து பாதிப்பு


ADDED : ஜூன் 09, 2025 03:37 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: கொல்லிமலை, மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் மரம் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இந்த மலைக்கு, நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் இரவு ஏராளமான சுற்றுலா பயணிகள் டூவீலர், கார்களில் காரவள்ளி வழியாக, 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள சாலையில் சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 1:00 மணியளவில் வெளி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மூன்றாவது கொண்டை ஊசி வளைவில், 10 ஆண்டு பழமையான மரம் சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால், ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர், சாலையின் குறுக்கே சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.






      Dinamalar
      Follow us