sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விபத்தில் லாரி உரிமையாளர் உயிரிழப்பு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

/

விபத்தில் லாரி உரிமையாளர் உயிரிழப்பு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

விபத்தில் லாரி உரிமையாளர் உயிரிழப்பு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

விபத்தில் லாரி உரிமையாளர் உயிரிழப்பு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : அக் 02, 2024 07:30 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: விபத்தில் உயிரிழந்த லாரி உரிமையாளரின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாமக்கல், ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் சண்முகம், 59; லாரி உரிமையாளர். இவர், 2023 ஆக., 14ல், நாமக்கல் - திருச்சி சாலையில் டூவீலரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. படுகாய-மடைந்த சண்முகம், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2023 செப்., 5ல் உயிரிழந்தார்.

சண்முகம், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பி-னராக இருந்துள்ளார். அப்போது, சங்க உறுப்பினர்களுக்கு அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில், குரூப் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் பாலிசி பெற்று பிரீமியம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சண்முகம் இறந்த பின், அவரது மனைவி, குழந்தைகள், இன்-சூரன்ஸ் நிறுவனத்தில், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு விண்-ணப்பித்தனர். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், 'சண்முகத்தின் இறப்புக்கு விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணம் அல்ல; அவ-ருக்கு இருந்து வந்த நோய் தான் காரணம்' எனக்கூறி பணம் வழங்க மறுத்துள்ளது.இதனால், சண்முகத்தின் மனைவி மற்றும் அவரது வாரிசுகள், இன்சூரன்ஸ் நிறுவனம் மீது கடந்த, ஜூனில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி-பதி ராமராஜ், நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில், இன்சூரன்ஸ் நிறுவனம், விபத்தில் இறந்தவரின் மனைவி மணி, 56, மகன் சதீஷ், 33, மகள் உமா, 31 ஆகியோருக்கு, 15 நாட்களுக்குள், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us