sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

/

நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ADDED : செப் 27, 2025 01:45 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:

* சுரேஷ், விவசாயி: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், சீராப்பள்ளி டவுன் பஞ்., தேவஸ்தானம்புதுார் தொடக்கப்பள்ளியில், மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனால், அங்கு படிக்கும் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். தண்ணீர் தேங்காமல் இருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

* துரைசாமி, விவசாயி: நாமக்கல் மாவட்டம், போதமலை அடிவாரம் பெரும்பாலி ஆற்றில் இருந்து பட்டணம் ஆலந்துார் ஏரி வழியாக வெளியேறும் உபரி நீர், பட்டணம் முனியப்பம்பாளையம் குட்டையை அடைகிறது. ஆனால், வழித்தடம் ஆக்கிரமிப்பு காரணமாக, விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து, விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பாலசுப்ரமணியன், பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்ற கழகம்: நாமக்கல் மாவட்டத்தில், 2013 முதல், இலவச மின் இணைப்பு கேட்டு, 15,000 விவசாயிகள் காத்திருக்கின்றனர். அதனால், உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.






      Dinamalar
      Follow us