/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பல்வேறு கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
பல்வேறு கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : செப் 15, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட ஓடப்பள்ளி பஞ்., பாரதி நகர் பகுதியில் இருந்து மாற்று கட்சியை சேர்ந்த இளைஞர்கள், 30க்கும் மேற்பட்டோர், நேற்று, பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணியை சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைத்துக்கொண்டனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களை, சால்வை அணிவித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி வரவேற்றார். ஓடப்பள்ளி பஞ்., முன்னாள் தலைவர் செந்தில், பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் தனபால், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் சோமசுந்தரம் உள்பட பலர் உடனிருந்தனர்.