/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெள்ளையம்மாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
வெள்ளையம்மாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : டிச 09, 2025 05:21 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மி அம்மன், முனீஸ்வரர், சப்த கன்னிமார் கோவில்கள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை, பெருமாள் கோவிலில் இருந்து கங்கா, யமுனா, காவிரி ஆகிய புன்னிய நதி தீர்த்தங்கள், முளைப்பாரியுடன் ஊர்வலம் கொண்டு வரப்பட்டது. மாலை, மங்கள இசை, கணபதி பூஜை, புண்ணியாக வாஜனம் ஆகியவையுடன் யாகவேள்வி தொடங்கியது. இரவு, 12:00 மணிக்கு மதுரை வீரன், வெள்ளையம்மன், பொம்மி அம்மன், முனீஸ்வரர், சப்த கன்னிமார்களுக்கு கண் திறக்கப்பட்டது.
நேற்று காலை, 4:00 மணிக்கு கலச பூஜை, கணபதி ஹோமம், நாடிசந்தானம், 108 வேத காயத்ரி ஹோமம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு புனிதநீரை சுவாமி மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாமகிரிப்பேட்டை பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

