sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஓட்டு அரசியலுக்கு இலவசம் வழங்கினால் எதிர்ப்போம்: பா.ஜ., அண்ணாமலை 'பளிச்'

/

ஓட்டு அரசியலுக்கு இலவசம் வழங்கினால் எதிர்ப்போம்: பா.ஜ., அண்ணாமலை 'பளிச்'

ஓட்டு அரசியலுக்கு இலவசம் வழங்கினால் எதிர்ப்போம்: பா.ஜ., அண்ணாமலை 'பளிச்'

ஓட்டு அரசியலுக்கு இலவசம் வழங்கினால் எதிர்ப்போம்: பா.ஜ., அண்ணாமலை 'பளிச்'


ADDED : ஜன 20, 2025 07:18 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: ''மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்வோம். ஓட்டு அரசியலுக்காக வழங்கினால் கடுமையாக எதிர்ப்போம்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பேற்கும் விழா, நேற்று மாலை நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தலைவராக ராஜேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து அண்ணாமலை, நிருபர்களிடம் அளித்த பேட்டி:

இலவசங்களை எதிர்ப்பதாக சொல்லும் பா.ஜ., கட்சி, டில்லி தேர்தலில் இலவசங்களை வாரி வழங்குவது சரியா என்று கேட்கிறீர்கள். நான் தமிழகத்திற்கு தான் தலைவர்; மராட்டியத்தில் என்ன நடக்கிறது. மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை, 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் இருக்கிறது. இதை கட்டி முடிக்க பல ஆண்டுகளாகும். மூன்று லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் என்றால், 60,000 கோடி, 70,000 கோடி ரூபாய் எதற்காக செலவு செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்வோம். ஓட்டு அரசியலுக்காக வழங்கினால் கடுமையாக எதிர்ப்போம்.

தமிழகத்தில் திராவிட ஆட்சியால் தான் அருந்ததியர் மக்கள் மருத்துவ படிப்பில் அதிக அளவில் சேர முடிகிறது என அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது தான் அருந்ததிய சமுதாய மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி கொடுத்து படிக்க சொல்வதாக சொல்லி கொள்கின்றனர். தற்போது தி.மு.க., ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. முந்தைய ஐந்து ஆட்சிகளில் என்ன செய்தார்கள்? இன்றைக்கும் பட்டியல் சமுதாயம் கல்வியில் பின்தங்கித்தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us