/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாப பலி
/
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாப பலி
ADDED : நவ 03, 2025 03:14 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பிலிப்பாகுட்டை பகுதியை சேர்ந்-தவர் ஜெயசந்திரன். இவரது தோட்டத்தில், சேலம் மாவட்டம், தாசநாய்க்கன்பட்டியை சேர்ந்த  சரவணன், 30, கடந்த, 3 ஆண்-டுகளாக வேலை செய்து  வந்தார். பிலிப்பாகுட்டையை சேர்ந்த சித்ரா, 28, என்பவரை திருமணம் செய்து கொண்டதால், சர-வணன் அப்பகுதியிலேயே வசித்து வந்தார்.
இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  நேற்று முன்-தினம், தோட்டத்தில் மருந்து அடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்ற சரவணன், தவறி கிணற்றில் விழுந்துவிட்டார். இதைய-றிந்த ஜெயசந்திரன், ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.  விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி சரவணனை சடலமாக மீட்டனர். இதுகு-றித்து ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

