sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரத்தை உடைத்த கார் உயிர் தப்பிய இளைஞர்கள்

/

மரத்தை உடைத்த கார் உயிர் தப்பிய இளைஞர்கள்

மரத்தை உடைத்த கார் உயிர் தப்பிய இளைஞர்கள்

மரத்தை உடைத்த கார் உயிர் தப்பிய இளைஞர்கள்


ADDED : செப் 07, 2025 12:46 AM

Google News

ADDED : செப் 07, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம் :கேரளா மாநிலம், கொச்சியை சேர்ந்த நண்பர்கள் விஷாக், 24, எல்விஸ் டென்னி, 25; இருவரும் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம், ஓணம் விடுமுறையால், காரில் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். பின், மீண்டும் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். விஷாக், காரை ஓட்டினார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை, வட்டமலை பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து கார் பறந்து சென்று சாலையோரம் இருந்த மரத்தை உடைத்து, கீழே விழுந்தது.

இந்த விபத்தில் கார் முழுவதும் சேதமடைந்த நிலையில், காரில் பயணம் செய்த, இரண்டு இளைஞர்களும் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us