ADDED : ஜூலை 07, 2026 10:25 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் மழையுடன் மேகமூட்டமான காலநிலை நிலவி வருவதால், வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது.
அதில், தேவாலா நீர்மட்டம் முதல் ஏலியாஸ் கடை வரையிலான பகுதிகளில் மூன்று நாட்களாக, பகல் நேரங்களில் அவ்வப்போது, கடும் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தின் உதவியுடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க சிரமப்படுகின்றனர். கடும் குளிரால் பொதுமக்களும் நடந்து செல்வதில் சிரமப்பட்டனர். நேற்று காலையும் கடும் மேகமூட்டம் நிலவியது. சிறிது நேரத்தில் காலநிலை இயல்பு நிலைக்கு மாறியது. இந்த காலநிலையை, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ரசித்து சென்றனர்.
