/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முட்புதரால் வாகன ஓட்டிகளுக்கு தொல்லை
/
முட்புதரால் வாகன ஓட்டிகளுக்கு தொல்லை
ADDED : ஏப் 30, 2024 01:27 AM

ஊட்டி;மஞ்சூர் சாலையின் இருப்புறம் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.
மஞ்சூரிலிருந்து கோவை, பெரும்பள்ளம், முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவை அரசு பஸ்கள் செல்கிறது.
அதேபோல், கோவையிலிருந்து மஞ்சூருக்கு பஸ்கள் வருகிறது. கெத்தையிலிருந்து பெரும்பள்ளம் வரை, ஊட்டி கோட்ட நெடுஞ்சாலைதுறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இச்சாலையில், அரசு பஸ்கள், ஏராளமான தனியார் வாகனங்கள் அதிகளவில் வருகிறது.
சாலையில் இருப்புறம் வளர்ந்துள்ள முட்புதரால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
அதேபோல், மஞ்சூர்-கெத்தை, பெரும்பள்ளம் -முள்ளி வரையும் குறுகலான சாலையில் வளர்ந்துள்ள முட்புதரால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆங்காங்கே ஓங்கி வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

