/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண் கலந்த குடிநீர் ;மக்கள் பயன்படுத்த சிரமம்
/
மண் கலந்த குடிநீர் ;மக்கள் பயன்படுத்த சிரமம்
ADDED : மே 31, 2024 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;'அருவங்காடு ஒசட்டி பகுதியில் குடிநீர் மண் கலந்து வருவதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் அருவங்காடு ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட அருவங்காடு ஒசட்டி பகுதியில் குடிநீர் மண் கலந்து வருகிறது. இதனால், மக்கள் பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இது குறித்து பேரூராட்சிக்கு தெரிவிக்கப்பட்டும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.