ADDED : ஜூன் 02, 2026 10:33 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் பெட்போர்டு மற்றும் மார்க்கெட் கடைகள் உடைத்து நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
குன்னுார் பெட்போர்டு பகுதியில் மொபைல் போன் பழுது பார்க்கும் கடையை உடைத்து செல்போன்கள் திருடு போயின. மார்க்கெட்டில் திருமலை செல்வன் என்பவரின் கடையில் பூட்டு உடைத்து வெள்ளி, கவரிங் நகைகள் திருடப்பட்டன. தொடர்ந்து, டி.எஸ்.பி., ரவி தலைமையில் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் பால்ராஜ், 52, அளக்கரையை சேர்ந்த மாரிமுத்து என்கிற செல்வகுமார், 46 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கவரிங் நகைகள் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
