sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனத்தில் பரவிய காட்டுத்தீ: மரங்கள் எரிந்து சாம்பல்

/

வனத்தில் பரவிய காட்டுத்தீ: மரங்கள் எரிந்து சாம்பல்

வனத்தில் பரவிய காட்டுத்தீ: மரங்கள் எரிந்து சாம்பல்

வனத்தில் பரவிய காட்டுத்தீ: மரங்கள் எரிந்து சாம்பல்


ADDED : மே 05, 2024 12:36 AM

Google News

ADDED : மே 05, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;கோரகுந்தா வனத்தில் பரவிய காட்டு தீயால் பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சாம்பலானது.

நீலகிரி வனக்கோட்டம், கோரகுந்தா வனப்பகுதி பல ஏக்கர் கொண்டதாகும். தமிழக - கேரளா எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விலை உயர்ந்த காட்டு மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் வன விலங்குகள் அதிகளவில் உலா வருகிறது. கோடை வறட்சியால் கோரகுந்தா வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம், கேரளா வனத்தில் பரவிய காட்டு தீ, வராகா பள்ளம் வனத்திலிருந்து மேல் நோக்கி பரவி கோரகுந்தா வனப்பகுதியில் பரவியது. கட்டுக்கடங்காத காட்டு தீ பரவலால் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. வனத்தில் இருந்த சீகை, கற்பூரம் மற்றும் காட்டு மரங்கள் எரிந்து சாம்பலானது.

வனத்துறையினர் ஆங்காங்கே தீ தடுப்பு கோடுகள் அமைத்துள்ளனர். ஆனாலும், கடும் வறட்சியால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். கோரகுந்தா வனப்பகுதியில் ரேஞ்சர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

200 இடங்களில் தீ பரவல்

நீலகிரி வனக்கோட்டத்தில், இம்முறை வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, பந்தலுார், கூடலுார் தாலுகாவுக்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி என, கடந்த மார்ச், ஏப்., மாதங்களில், 200 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீயால் வனப்பகுதி, வருவாய் நிலம், பட்டா என, பல ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us