sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ கேழ்வரகு பறிமுதல்

/

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ கேழ்வரகு பறிமுதல்

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ கேழ்வரகு பறிமுதல்

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ கேழ்வரகு பறிமுதல்


ADDED : செப் 26, 2025 08:57 PM

Google News

ADDED : செப் 26, 2025 08:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:

கூடலுாரில் இருந்து கர்நாடகா அரசு பஸ்சில் கடத்த முயன்ற, 300 கிலோ கேழ்வரகை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா இரண்டு கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும், கேழ்வரகு சிலர் வெளி மாநிலத்துக்கு கடத்துவதாக புகார் உள்ளது.

இந்நிலையில், கூடலுாரில் இருந்து கர்நாடகா அரசு பஸ்சில், கர்நாடகாவுக்கு கேழ்வரகு கடத்துவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது.

கூடலுார் வட்ட வழங்கல் அலுவலர் நடேஷன் மற்றும் ஊழியர்கள் நேற்று, மாலை புதிய பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர். அப்போது, கர்நாடக அரசு பஸ்சில் ஏற்றுவதற்காக சில மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன.

அதனை ஆய்வு செய்தபோது அவை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கேழ்வரகு என்பது, தெரிய வந்தது. சிறிதும், பெரிதுமாக, 8 மூட்டைகளில் இருந்த, 300 கிலோ கேழ்வரகை பறிமுதல் செய்தனர். இதனை வைத்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us